ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறுகிறது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் ஜனவரி 31-ஆம் தேதி அன்று ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக ஹேமந்த் சோரன் தனது முதலவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 12-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.